ஐபிஎல் முறைகேடு விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து என்.சீனிவாசன் தாமாகவே பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. பதவி விலக தவறினால் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான அமர்வு எச்சரித்தது. இதை தொடர்ந்து சீனிவாசன் பதவி விலகியதை அடுத்து, ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை பிசிசிஐ தற்காலிக தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்கலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதே போல் ஐபிஎல் 7 போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடம் பெறக்கூடாது என நீதிபதிகள் பரிந்துரைத்தனர். மேலும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய எந்த ஒரு நபரும் பிசிசிஐ-ல் அங்கம் வகிக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஐபிஎல் சூதாட்ட சர்சை விவகாரத்தில் முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ இன்று உறுதியளித்துள்ளது. இருப்பினும், கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி, தீவிர பரிசீலனைக்குப் பின்னரே உத்தரவு பிறப்பிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ உறுதியளித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.