BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 4 April 2014

காங்கிரஸ் ஆளும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் பெண்கள் அதிக அளவில் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்-மோடி

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் நரேந்திர மோடி. கூட்டத்தில் அவர் பேசியதாவது:

 "தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விபரத்தின்படி காங்கிரஸ் ஆளும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் பெண்கள் அதிக அளவில் வன் கொடுமைக்கு ஆளாகின்றனர். ஆனால் இந்த பட்டியலில் ஒரே ஒரு பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலம் இடம் பெறவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இளம் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அப்படியிருக்க இந்த தேசத்தின் பெண்கள் பாதுகாப்பு எப்படி அக்கட்சி உறுதி செய்யும்?

பெண்கள் பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. நிர்பயா நிதி என பெயரிடப்பட்ட இந்த நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட இதுவரை செலவு செய்யப்படவில்லை. இந்த நிதி என்னவாயிற்று?

இவ்வாறு பேசிய மோடி, டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையும், மனைவியைக் கொன்று தந்தூரி அடுப்பில் எரித்த வழக்கில் டெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுஷில் சர்மாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதையும் அவர் பேசும் போது சுட்டிக்காட்டினார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media