இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து , பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக்கோள் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் கண்காணிக்கும். தரைவழி, வான்வழி, கடல்வழிப் போக்குவரத்தை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், உரிய நேரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1432 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்படும்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக்கோள் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் கண்காணிக்கும். தரைவழி, வான்வழி, கடல்வழிப் போக்குவரத்தை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், உரிய நேரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1432 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்படும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.