காங்கிரஸ் துணைத் தலைவரும் அமேதி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு அமேதி வசிப்பிடச் சான்றிதழ் விநியோகிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உள்ளாட்சி நிர்வாகம் நிராகரித்தது. இதற்கான காரணங்கள் என்ன என்று மாவட்ட ஆட்சியர் ஜகத்ராஜ் திரிபாதி கூறியதாவது:
இந்த மனுவை ராகுல் காந்தியே தனது கையொப்பமிட்டு தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த மனுவில் அவரது கையொப்பமும் இல்லை. ராஜேந்திர சிங் என்பவர்தான் இந்த மனுவை கொடுத்திருக்கிறார், இது சட்ட மீறலாகும்.
மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய பிற ஆவணங்களும் இதில் இல்லை. ராகுல் காந்தி இந்த சான்று கோரி விண்ணப்பிப்பதாக இருந்தால் அவரே நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இல்லை யெனில் மனுவில் கையொப்பமிட்டு, அதனுடன் உரிய ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதனிடையே இருப்பிடச்சான்று கோரி ராகுல் காந்தி மனு செய்யவில்லை என்றும் இது ஏமாற்று வேலை என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனுவை ராகுல் காந்தியே தனது கையொப்பமிட்டு தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த மனுவில் அவரது கையொப்பமும் இல்லை. ராஜேந்திர சிங் என்பவர்தான் இந்த மனுவை கொடுத்திருக்கிறார், இது சட்ட மீறலாகும்.
மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய பிற ஆவணங்களும் இதில் இல்லை. ராகுல் காந்தி இந்த சான்று கோரி விண்ணப்பிப்பதாக இருந்தால் அவரே நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இல்லை யெனில் மனுவில் கையொப்பமிட்டு, அதனுடன் உரிய ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதனிடையே இருப்பிடச்சான்று கோரி ராகுல் காந்தி மனு செய்யவில்லை என்றும் இது ஏமாற்று வேலை என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.