சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பா.ஜ.க.வை ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:
கருணாநிதி அளவுக்கு ஜெயலலிதாவிடம் அடக்கமும் கிடையாது, கண்ணியமும் கிடையாது. 20 நாள்களுக்கு முன்பு வரை அம்மா தான் பிரதமர் என்று அக்கட்சியினர் முழங்கினர். தற்போது அம்மாவே பிரதமர் என பேசவில்லை என்றவுடன், அதிமுகவினர் சும்மா இருக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டில் 12-வது ஆட்டக்காரர் ஒருவர் இருப்பார். அவர் பேட்டிங், பவுலிங் செய்யக் கூடாது. ஆனால் ஆட்டக்காரர்களில் யாருக்காவது காயம்பட்டாலோ வெளியேற முற்பட்டாலோ, 12-வது ஆட்டக்காரர் சென்று பீல்டு செய்யலாம். அதுபோன்று பாஜக ஆட்சி அமைக்க முன்வந்தால், அவர்களுக்கு உதவ 12-வது ஆட்டக்காரராக ஜெயலலிதா உள்ளார். பாஜகவின் ‘பி’ டீம் ஆக அவர் ரகசியமாகச் செயல்படுகிறார். இதனால்தான், பாஜக தலைவர்களை ஜெயலலிதா விமர்சிப்பதில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் மருகுகிறார்கள். இதனைத் தெளிவுபடுத்தாதவரை நான் ‘பி’ டீம் என்று ஜெயலலிதாவை குற்றஞ்சாட்டுவேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
கருணாநிதி அளவுக்கு ஜெயலலிதாவிடம் அடக்கமும் கிடையாது, கண்ணியமும் கிடையாது. 20 நாள்களுக்கு முன்பு வரை அம்மா தான் பிரதமர் என்று அக்கட்சியினர் முழங்கினர். தற்போது அம்மாவே பிரதமர் என பேசவில்லை என்றவுடன், அதிமுகவினர் சும்மா இருக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டில் 12-வது ஆட்டக்காரர் ஒருவர் இருப்பார். அவர் பேட்டிங், பவுலிங் செய்யக் கூடாது. ஆனால் ஆட்டக்காரர்களில் யாருக்காவது காயம்பட்டாலோ வெளியேற முற்பட்டாலோ, 12-வது ஆட்டக்காரர் சென்று பீல்டு செய்யலாம். அதுபோன்று பாஜக ஆட்சி அமைக்க முன்வந்தால், அவர்களுக்கு உதவ 12-வது ஆட்டக்காரராக ஜெயலலிதா உள்ளார். பாஜகவின் ‘பி’ டீம் ஆக அவர் ரகசியமாகச் செயல்படுகிறார். இதனால்தான், பாஜக தலைவர்களை ஜெயலலிதா விமர்சிப்பதில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் மருகுகிறார்கள். இதனைத் தெளிவுபடுத்தாதவரை நான் ‘பி’ டீம் என்று ஜெயலலிதாவை குற்றஞ்சாட்டுவேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.