BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 5 April 2014

அம்பானி, வீரப்ப மொய்லி, முரளி தியோரா மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை

இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக பெட்ரோலிய மந்திரி வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா ஆகியோர் மீது டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்தபோது அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தில்,  'ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணை முடிவடையும் வரை, இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் மீது வழக்கு தொடர டெல்லி அரசுக்கு உரிமையில்லை என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தபோது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட மாநில அரசுகளுக்கு உரிமையில்லை என்று கூறினார், மேலும் அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என பேசிய அவர், இவ்வழக்கை கெஜ்ரிவால் அரசு, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அப்படியொரு வழக்கை பதிவு செய்ததாக தனது வாதத்தின்போது தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media