BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 5 April 2014

அமெரிக்க போலீஸ் அதிகாரி டெல்லியில் கைது, இந்தியாவின் பழி வாங்கும் படலமா?!

டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய நியூ யார்க் போலீஸ் அதிகாரி மேன்னி என்கார்னேஷன், தன்னுடைய பையில் மூன்று துப்பாக்கி குண்டுகளை வைத்து இருந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் விடுவிக்க பட்டு இருந்தாலும், இந்திய நாட்டை விட்டை விட்டு வெளியேற கூடாது என்றும், ஏப்ரல் 17 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

அமெரிக்க ஊடகங்கள், தேவயாணி கைதிற்காக, இந்தியாவின் பழி வாங்கும் நடவடிக்கையே என்று கூறுகின்றன.

"எங்கள் நாட்டு தூதர்களை ஆடைகள் அகற்றி சோதனை செய்வீர்களா.." என்று டெல்லி விமான நிலையத்தில் உள்ள அதிகாரி, மேன்னியை கைது செய்யும் போது கூறியதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து நியூயார்க் காவல் துறையிடம் இருந்து, இந்திய அதிகாரிகளுக்கு கடிதம் வந்திருக்கிறது. மேன்னி, தனது ஜாக்கெட்டில் மூன்று குண்டுகளை வைத்து இருந்தார் என்றும், ஆனால் அதைப் பற்றி மறந்துவிட்டு, தவறுதலாக அந்த ஜாக்கெட்டையும் தனது பையில் வைத்து கொண்டு பயணம் செய்து விட்டார், அவர் தெரியாமல் செய்த தற்செயலான தவறு என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media