மக்களவை தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து ஜெயலலிதா பேசியதாவது:
"நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறுகின்ற சாதாரணத் தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தருகின்ற தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கின்ற தேர்தல், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவை மீட்கும் தேர்தல், ஊழல் சாம்ராஜ்யத்தில் இருந்து இந்திய நாட்டை விடுவிப்பதற்காக நடைபெறுகின்ற தேர்தல்.
விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; திருமண உதவித் தொகையுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்; விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்; என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமூகநீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நலன் கருதி சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் முதலாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் வளர்ச்சிக்காக, நலனுக்காக, பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், தி.மு.க. என்ன செய்தது? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, விவசாயிகளின் வாடிநவாதாரத்திற்கு, வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காததோடு, விவசாயத்தை வீடிநத்தும் பணியிலும் ஈடுபட்ட கட்சி தி.மு.க.
சேது சமுத்திரக் கால்வாயில் பயணிக்கும் கப்பலின் ஆழம் 10 மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தக் கால்வாயில் 20,000 டன் எடை கொண்ட கப்பல்கள் தான் செல்ல முடியும். இது போன்ற சிறிய கப்பல்கள் தற்போது மிகவும் குறைவு. தற்போது உலகில் ஆழம் அதிகம் கொண்ட கப்பல்கள் தான் வடிவமைக்கப்படுகின்றன.
தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும்பாலும் பெரிய சரக்குக்கப்பல்கள் தான் வந்து செல்கின்றன. இந்தப் பெரிய கப்பல்கள் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்லவே முடியாது.
எனவே, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பெரிய கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வர முடியும் என்பதும், இந்தத் திட்டத்தால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் பொய்; வடிகட்டிய பொய். "
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தில் உரையாற்றிருந்தார்.
"நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறுகின்ற சாதாரணத் தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தருகின்ற தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கின்ற தேர்தல், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவை மீட்கும் தேர்தல், ஊழல் சாம்ராஜ்யத்தில் இருந்து இந்திய நாட்டை விடுவிப்பதற்காக நடைபெறுகின்ற தேர்தல்.
விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; திருமண உதவித் தொகையுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்; விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்; என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமூகநீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நலன் கருதி சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் முதலாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் வளர்ச்சிக்காக, நலனுக்காக, பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், தி.மு.க. என்ன செய்தது? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, விவசாயிகளின் வாடிநவாதாரத்திற்கு, வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காததோடு, விவசாயத்தை வீடிநத்தும் பணியிலும் ஈடுபட்ட கட்சி தி.மு.க.
சேது சமுத்திரக் கால்வாயில் பயணிக்கும் கப்பலின் ஆழம் 10 மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தக் கால்வாயில் 20,000 டன் எடை கொண்ட கப்பல்கள் தான் செல்ல முடியும். இது போன்ற சிறிய கப்பல்கள் தற்போது மிகவும் குறைவு. தற்போது உலகில் ஆழம் அதிகம் கொண்ட கப்பல்கள் தான் வடிவமைக்கப்படுகின்றன.
தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும்பாலும் பெரிய சரக்குக்கப்பல்கள் தான் வந்து செல்கின்றன. இந்தப் பெரிய கப்பல்கள் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்லவே முடியாது.
எனவே, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பெரிய கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வர முடியும் என்பதும், இந்தத் திட்டத்தால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் பொய்; வடிகட்டிய பொய். "
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தில் உரையாற்றிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.