இரவு 10 மணிக்குமேல் ஒலிபெருக்கி பயன்படுத்திதான் பிரச்சாரம் செய்யக் கூடாது. ஆனால், நள்ளிரவிலும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நள்ளிரவில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது கிரிமினல் குற்றமாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தால் வேட்பாளர் இந்திய தண்டனைச் சட்டம் 451 பிரிவின் கீழ் கைது செய்யப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.
வேட்பாளர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்தால், அந்தப் பிரச்சாரக் கூட்டத்துக்கான செலவுகள் முழுவதும் வேட்பாளரின் செலவுக் கணக்கில்தான் சேர்க்கப்படும் என்ற விதிமுறையை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு தொடர போவதாக கூறியிருப்பதை பற்றி கேட்ட போது, அது தேர்தல் ஆணையத்தின் பழைய விதிமுறை என்று பிரவீண்குமார் பதிலளித்தார்.
வேட்பாளர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்தால், அந்தப் பிரச்சாரக் கூட்டத்துக்கான செலவுகள் முழுவதும் வேட்பாளரின் செலவுக் கணக்கில்தான் சேர்க்கப்படும் என்ற விதிமுறையை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு தொடர போவதாக கூறியிருப்பதை பற்றி கேட்ட போது, அது தேர்தல் ஆணையத்தின் பழைய விதிமுறை என்று பிரவீண்குமார் பதிலளித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.