BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 6 April 2014

மோடி பிரதமராக ரஜினிகாந்த் ஆதரவு தரவேண்டும்: ராம்ஜெத்மலானி

மூத்த வழக்கறிஞரும், பாராளுமன்ற மேல் சபை உறுப்பினருமான ராம்ஜெத்மலானி, நேற்று மதுரை வந்தார். மதுரையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"ரஜினிகாந்த் தமிழகத்தில் பிரசித்தி பெற்றவர். அவர் என் நண்பரும் கூட‌. அவருக்கு ஒரு கடமை இருக்கிறது. மோடியை நமது நாட்டின் பிரதமராக்குவதற்கு ரஜினிகாந்தின் சக்தியை பயன்படுத்த வேண்டும். மோடி பிரதமராவதை அவர் ஆதரிக்க வேண்டும். மோடி மதச்சார்பானவர் என கூறுவது தவறு.

குஜராத்தில் அனைத்து முஸ்லிம் இனத்தவரும் சிறந்த கல்வியை பெற மோடி வழி வகுத்துள்ளார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர். நேர்மையானவர். மோடியைபோல் நேர்மையும், தைரியமும் கொண்டவர் வைகோ. அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். பாரதீய ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வைகோ முயற்சி செய்தார், ஆனால் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டு, தான் முயற்சி எடுத்ததுபோல் காட்டிக்கொண்டார்.

நமது நாட்டில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் 70 லட்சம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன். தேர்தல் கமிஷனும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கடிதமும் எழுதி இருக்கிறேன்." என ராம்ஜெத்மலானி கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media