BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 6 April 2014

சொத்து விவரங்களை மறைத்தால் வேட்பாளர்களுக்கு சிறை தண்டனை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறைகள் என கூறியதாவது:

வேட்பாளர்கள் தேர்தல் செலவுக் கணக்கை வாக்குப்பதிவு முடிந்த 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் தங்கள் சொத்துக்கள் பற்றிய விவரங்களை மறைத்தோ அல்லது தவறான தகவலோ தரக்கூடாது. வேட்பாளர்கள் மீது ஏதேனும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை மறைக்கக்கூடாது. அது மிகப் பெரிய குற்றமாகும். அவ்வாறு செய்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வேட்பாளருக்கு சிறை தண்டனை கிடைக்கும்.

மேலும், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தாக்கப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு ஊறு விளைவிக்கக் கூடியவர்கள் எனக் கருதப்படும் 13,927 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் தந்துள்ளோம்.அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 20,737 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாகனச் சோதனையில் இதுவரை ரூ.16.39 கோடி ரொக்கமும், ரூ.6.87 கோடி மதிப்பிலானபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் அதிகபட்சமாக ரூ.2.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை பணம், பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தேர்தல் நடைமுறைகளில் பிரச்சினை ஏற்பட்டால் வாக்குப்பதிவை நிறுத்த தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media