BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 6 April 2014

பாகிஸ்தான் ரசிகருக்கு இறுதிப் போட்டிக்கான டிக்கெட் வாங்கித் தந்த தோனி!

டி20 உலகக் கோப்பை வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி இன்று இரவு நடக்கிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தானின் ஆட்டத்தைக் காண, அந்த அணியின் ரசிகர் முகமது பஷீர் சிகாகோவில் இருந்து வந்திருந்தார். தனது தேச அணி அரையிறுதிக்கு முன்னரே வெளியேறினாலும், இந்தியாவின் ஆட்டத்தைக் காண ஊருக்குத் திரும்பாமல் இருந்தார். சமீபத்தில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டபோது வேடிக்கை பார்க்க சென்ற இவரை தோனி சந்தித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தைக் காண பஷீர் வந்திருந்ததால், தோனி அவரை அடையாளம் கண்டுகொண்டு அவரைப் பற்றி விசாரித்துள்ளார். தன்னிடம் இறுதிப் போட்டியைக் காண டிக்கெட் இல்லாததை கூறிய பஷீருக்கு பயிற்சியாளரிடம் கூறி காம்ப்ளிமென்ட்ரி டிக்கெட்டை தோனி ஏற்பாடு செய்துள்ளார். மேலும், பயிற்சி நடக்கும் இடத்தில் பஷீர் நெடு நேரமாக நின்று கொண்டிந்ததால், அங்கிருந்த ஒருவரிடம் கூறி, பஷீருக்கு பழங்களும் வாங்கி கொடுத்து இருக்கிறார், தோனி.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருந்தவரான பஷீர், இந்தச் சம்பவத்திற்கு பிறகு தோனியின் தீவிர‌ ரசிகராக தான் மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். 



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media