BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 April 2014

யுவராஜ் சிங் இல்லத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது!

நேற்று வங்கதேசத்தில் நடந்த இருபது ஓவர் உலக கோப்பை இறுதி சுற்றில், இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதைய‌டுத்து, ஆத்திரம் அடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்,  சண்டிகரில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இல்லத்தின் மீது கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்ட‌னர். 

இது பற்றி தகவல் அறிந்ததும், காவல் அதிகாரிகள் யுவராஜ் சிங் இல்லத்திற்கு விரைந்து, ஆத்திரத்துடன் இருந்த கும்பலை கட்டுபடுத்தி, அவர்களை அங்கிருந்து விலக செய்தனர்.

21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே யுவராஜ் சிங் சேகரித்து இருந்தார். அதிரடியாக ஆடி கொண்டிருந்த விராத் கோலிக்கு கடைசி நான்கு ஓவர்களில், 7 பந்துகள் விளையாட மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி 130 ரன்கள் மட்டுமே மொத்தமாக எடுக்க முடிந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து, யுவராஜ் சிங் இல்லத்தை கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media