BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 26 May 2014

நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்கும் மோடி, 4000 பங்கேற்பு, மூன்றடுக்காக போலீஸ் பாதுகாப்பு

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் மோடி பதவியேற்பு விழாவில், சுமார் 4,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மோடியுடன் அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்பேற்கிறது.  சுமார் 4,000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இவ்விழாவில் பங்கேற்க சார்க் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நரேந்திர மோடியின் விருந்தினர்களாக அவரது தாய் ஹீராபாய் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றுள்ளனர்.

மோடி பதவியேற்பு விழாவையொட்டி, டெல்லி போலீஸார், துணை ராணுவப் படையினர், ஆயுதம் ஏந்திய போலீஸார் மூன்றடுக்காக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் உள் வளையம், அதிகாரிகள் அடங்கிய வெளி வளையம், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் வளையம் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், என்.எஸ்.ஜி. பாதுகாப்புப் படையினர், அதிரடி தாக்குதல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உயர் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media