உத்தரபிரதேச மாநிலத்தில் சரக்கு ரயில் மீது கோரக்பூர் விரைவு ரயில் மோதியதில் 20 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சன் கபிர் நகர் மாவட்டத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் வேகமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நரேந்திர மோடி, இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கேபினட் செயலாளரை உடனடியாக தொடர்பு கொண்ட அவர், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவிகளை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஒரு லட்சம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என வடகிழக்கு ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.