BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 26 May 2014

மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த 5 மாநில முதல்வர்கள்


நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களின் முதல் அமைச்சர்க‌ள் புறக்கணித்து இருக்கிறார்கள்.

மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ராஜபக்சேவை அழைத்த செயல் ‘‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே அதனை தவிர்த்திருக்க வேண்டும்’’ என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்வில்லை. தமிழக அரசு சார்பிலும் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.

கேரள மாநில முதல்வர் உம் மன்சாண்டியும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை. ‘‘முன் கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் பதவி ஏற்பு விழாவுக்கு வர இயலாது" என்று மோடியிடம் உம்மன் சாண்டி ஏற்கனவே தெரிவித்து விட்டார் என்று உம்மன்சாண்டியின் அலுவலக அதிகாரிகள் கூறினார்கள். இதே காரணங்களுக்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொளள்வில்லை.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஒடிசா நிதி மந்திரி பிரதீப் அம்த பங்கேற்கிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் மோடி பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media