தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு 10 நாட்கள் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லெக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்றும், அந்த வழக்கு முடியும் வரை சொத்துக் குவிப்பு வழக்கிற்கு தடை விதிக்காவிட்டால் அது பெரிய அளவுக்கு முன்னனுமானங்களுக்கு வழி வகுக்கும் என்றும் வாதாடினார்.
சிவில் வழக்கு முடிந்த பின்னரே குற்ற வழக்கு விசாரிக்கப்படவேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் அவர் சுட்டிக்காட்டினார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு 10 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டனர்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.