இந்தியாவில் முதன்முறையாக 'நோட்டா' பொத்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அறிமுகமானது.
நீலகிரி
தொகுதியில், வாக்காளர்கள் கட்சிகளை ஒதுக்கிவிட்டு நோட்டாவுக்கு வாக்குகளை
பெரிய அளவில் பதிவு செய்துள்ளனர்.இந்த தொகுதியில் 46,559 பேர் நோட்டாவில் வாக்களித்துள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பொத்தானாக, ’மேலே உள்ள யாரும் இல்லை’
(None Of The Above) என்பதே நோட்டாவாகும்.
பல தொகுதிகளில், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய
மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளை விட நோட்டா அதிக
வாக்குகள் பெற்றுள்ளது.
மாநில அளவில் தமிழகத்தின் மொத்த 39 தொகுதிகளில் 31 தொகுதிகளின்
மக்கள் நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர். 26 தொகுதிகள் கொண்ட குஜராத்தில், 23 தொகுதிகளில் நோட்டா பதிவாகி உள்ளது. 42
தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 32 தொகுதிகளின் நோட்டா பதிவானது.
இதேபோல, பாஜக
பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா
தொகுதியில் 18,053 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை
நோட்டா பெற்றது. இதற்கு அடுத்த இடத்தை தான் காங்கிரஸ் கட்சி பெற்றது.
மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அளவில், நாடெங்கும் உள்ள தொகுதிகளில்
புதுச்சேரியில் நோட்டாவுக்கு அதிகபட்சமாக 3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த சதவீத அளவில் நோட்டா, கம்யூனிஸ்ட் கட்சிகளை மிஞ்சியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.