நாடாளுமன்ற தேர்தலில் 47 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் பாஜகவும் பாமகவும் செய்துள்ள ஒரு சாதனை
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களையும் பாஜக ஒரு இடத்திலும் பாமக ஒரு இடத்திலும் வென்றுள்ளன, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு இடம் கூட வெல்லவில்லை. 47 ஆண்டுகால நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் திமுக, அதிமுக கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் இதுவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 47 ஆண்டுகாலத்திற்கு பின் முதல் முறையாக தமிழகத்தில் திமுக ஆதரவின்றியும், அதிமுக ஆதரவின்றியும் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனும், பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாசும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் திமுக இல்லையென்றால் அதிமுக என்ற நிலை தான் இருந்தது, திமுக ஒரு தொகுதி கூட வெல்ல முடியாத நிலையில் பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக அணிகள் இணைந்த மூன்றாவது அணி தோல்வி அடைந்திருந்தாலும் இரண்டு இடங்களை வென்றுள்ளது, மேலும் பல இடங்களில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சில இடங்களில் மூன்றாவது இடத்தையும் கன்னியாகுமரியில் திமுக நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் மக்கள் வாக்களிக்கும் மனநிலையில் சில வேறுபாடுகள் உள்ளதால் மூன்றாவது அணியாக இருந்த பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக அணிகள் இணைந்து மீண்டும் 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளை வென்று தமிழக தேர்தல் களத்தை மும்முனைப்போட்டியாக மாற்றலாம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களையும் பாஜக ஒரு இடத்திலும் பாமக ஒரு இடத்திலும் வென்றுள்ளன, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு இடம் கூட வெல்லவில்லை. 47 ஆண்டுகால நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் திமுக, அதிமுக கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் இதுவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 47 ஆண்டுகாலத்திற்கு பின் முதல் முறையாக தமிழகத்தில் திமுக ஆதரவின்றியும், அதிமுக ஆதரவின்றியும் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனும், பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாசும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் திமுக இல்லையென்றால் அதிமுக என்ற நிலை தான் இருந்தது, திமுக ஒரு தொகுதி கூட வெல்ல முடியாத நிலையில் பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக அணிகள் இணைந்த மூன்றாவது அணி தோல்வி அடைந்திருந்தாலும் இரண்டு இடங்களை வென்றுள்ளது, மேலும் பல இடங்களில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சில இடங்களில் மூன்றாவது இடத்தையும் கன்னியாகுமரியில் திமுக நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் மக்கள் வாக்களிக்கும் மனநிலையில் சில வேறுபாடுகள் உள்ளதால் மூன்றாவது அணியாக இருந்த பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக அணிகள் இணைந்து மீண்டும் 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளை வென்று தமிழக தேர்தல் களத்தை மும்முனைப்போட்டியாக மாற்றலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.