பிஹாரில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, ஐக்கிய ஜனதா தளம் அரசின் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் ராஜினாமா செய்தார். இதையடுத்து அதே கட்சியைச் சேர்ந்த ஜிதன்ராம் மாஞ்சி புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. கூட்டத் துக்குப் பின் நிதிஷ் குமார் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு. 2015-ல் நடைபெறவிருக்கும் சட்ட சபைத் தேர்தலில் தனிப்பெரும் பான்மை கிடைத்தால் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பேன்” என்றார்.
இதையடுத்து நிதிஷ் தலைமை யில் ஆளுநர் டி.ஒய்.பாட்டீலைச் சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் ஜிதன்ராம் மாஞ்சி புதிய முதல்வராகப் பொறுப்பேற்பதற்கான உரிமையைக் கோரினர். அதற்கான ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தனர். தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ஜிதன்ராம், மாஞ்சி புய்யான் எனும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. கூட்டத் துக்குப் பின் நிதிஷ் குமார் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு. 2015-ல் நடைபெறவிருக்கும் சட்ட சபைத் தேர்தலில் தனிப்பெரும் பான்மை கிடைத்தால் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பேன்” என்றார்.
இதையடுத்து நிதிஷ் தலைமை யில் ஆளுநர் டி.ஒய்.பாட்டீலைச் சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் ஜிதன்ராம் மாஞ்சி புதிய முதல்வராகப் பொறுப்பேற்பதற்கான உரிமையைக் கோரினர். அதற்கான ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தனர். தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ஜிதன்ராம், மாஞ்சி புய்யான் எனும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.