நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி கூறும் தொலைபேசி அழைப்பு, தேர்தல் முடிவு வெளியாக தொடங்கிய சில மணி நேரங்களில் இருந்தே பல லட்சம் பேருடைய செல்போனுக்கு வர தொடங்கியது.
அச்செய்தியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா, ‘‘நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கி உள்ள எனது அன்பார்ந்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய ஒரு மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். , ‘வாட்ஸ் அப்’ மூலமும் இதுபோன்ற நன்றி அறிவிப்பு, அ.தி.மு.க.வின் பல லட்சம் தொண்டர்களையும் சென்று சேர்ந்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.