நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பல்வேறு கருத்துக்கணிப்புகள் மத்திய சென்னை தொகுதியை பொறுத்த வரையில், திமுக தான் வெற்றி பெறும் என்று தெரிவித்தபோதிலும், அ.தி.மு.க.வின் அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள கோகுல இந்திரா, தங்கள் கட்சி தலைமையின் நம்பிக்கையை பொய்யாக்காமல் கட்சிக்கு கடுமையாக உழைத்தார்.
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தனது அண்ணா நகர் தொகுதியில் மட்டும் அதிமுகவுக்கு திமுகவை விட 22687 வாக்குகள் கூடுதலாக கிடைக்கும் வகையில் தீவிரமாக பணியாற்றினார். அதனாலேயே மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க 45841 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது.
கோகுல இந்திராவின் இந்த தீவிர உழைப்பிற்கும், விசுவாசத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வெகுமதியாக, அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.