நாட்டின் பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி நாளை குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். 12 ஆண்டுகளாக குஜராத் முதல்வராக இருப்பவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு குஜராத் எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் விலகுகிறார் மோடி. தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனர் கமலா பெனிவலிடம் அளிக்கும் முன்னர் சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார் அங்கு அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
நாளை மாலை 3.30 மணியளவில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். அதன் பிறகு அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.