பாராளுமன்ற தேர்தல் முடிவில் தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது குறித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியிடம் கேட்ட போது, கருணாநிதியின் கட்டுப்பாட்டில் தி.மு.க. செயல்பட்டிருந்தால் தேர்தல் தோல்வியை தவிர்த்திருக்கலாம் என்றார்.
இதற்கிடையில் தி.மு.க.வின் தோல்வியை மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி உள்ளனர். மேலும் சிலர் தி.மு.க. தலைமையை எதிர்த்து மீண்டும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். "மூத்தவன் சொல்லும், முத்துன நெல்லிக்காயும் புளிக்கத்தான் செய்யும், ஆனால் எதிர்காலத்திற்கு நல்லது." என்ற வாசகத்தின்கீழ் மூத்தவரே என அச்சிட்டு அதன் அருகில் கருணாநிதி மற்றும் மு.க.அழகிரி படம் அச்சிடப்பட்டு உள்ளது. மு.க.ஸ்டாலினை மறைமுகமாக குறைகூறும் வகையில் இந்த போஸ்டர் உள்ளது என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.