சென்னையில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாத இடங்களுக்கு பொது மக்களின் வசதிக்காக சிறிய பேருந்துகளை முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.10.2013 அன்று அறிமுகப்படுத்தினார். முதல் கட்டமாக 50 சிறிய பஸ்கள் சென்னையில் விடப்பட்டன.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை அறிந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 19.2.2014 அன்று மேலும் 50 சிறிய பஸ்களை கொடியசைத்து சென்னையில் தொடங்கிவைத்தார். இந்த பஸ்களையும் பயணிகள் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். முதலில் விடப்பட்ட 50 சிறிய பஸ்களில் நேற்று வரை 79 லட்சத்து 78 ஆயிரத்து 14 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள் மூலம் கிடைத்த டிக்கெட் வசூல் ரூ.5 கோடியே 47 லட்சத்து 96 ஆயிரத்து 545 ஆகும். இதேபோல் 19.2.14 முதல் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மேலும் 50 சிறிய பஸ்கள் மூலம் நேற்றுவரை 30 லட்சத்து 69 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகள் மூலம் கிடைத்த டிக்கெட் வசூல் ரூ.2 கோடியே 14 லட்சத்து 37 ஆயிரத்து 141 ஆகும்.
100 சிறிய பஸ்கள் மூலம் மொத்தம் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 621 ஆகும். மொத்த டிக்கெட் வசூல் ரூ.7 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரத்து 686 ஆகும். சிறிய பஸ்களுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை அறிந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 19.2.2014 அன்று மேலும் 50 சிறிய பஸ்களை கொடியசைத்து சென்னையில் தொடங்கிவைத்தார். இந்த பஸ்களையும் பயணிகள் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். முதலில் விடப்பட்ட 50 சிறிய பஸ்களில் நேற்று வரை 79 லட்சத்து 78 ஆயிரத்து 14 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள் மூலம் கிடைத்த டிக்கெட் வசூல் ரூ.5 கோடியே 47 லட்சத்து 96 ஆயிரத்து 545 ஆகும். இதேபோல் 19.2.14 முதல் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மேலும் 50 சிறிய பஸ்கள் மூலம் நேற்றுவரை 30 லட்சத்து 69 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகள் மூலம் கிடைத்த டிக்கெட் வசூல் ரூ.2 கோடியே 14 லட்சத்து 37 ஆயிரத்து 141 ஆகும்.
100 சிறிய பஸ்கள் மூலம் மொத்தம் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 621 ஆகும். மொத்த டிக்கெட் வசூல் ரூ.7 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரத்து 686 ஆகும். சிறிய பஸ்களுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.