மக்களவை தேர்தலில் போட்டியிடாத தமிழக பாஜக வை சேர்ந்த நிர்மலா சீதாராமன் நேரடியாக அமைச்சர் ஆனார் .இவர் 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் ஆக வேண்டும் .தமிழகத்தில் பாஜக விற்கு பலம் இல்லாதாதால் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கலாம் என்று டெல்லி பாஜக எண்ணியது .ஆனால் அங்கு அதற்கு எதிர்ப்பு இருந்தது .எனவே இப்போது ஆந்திரா மூலம் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் .ஆந்திராவின் முன்னாள் முதல்வர் நேதரமல்லி ஜனார்த்தன ரெட்டி இறந்ததால் இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடைதேர்தல் வருகிறது .அங்கு தான் நிர்மலா சீதாராமன் நிற்கிறார். இவர்களது கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சியில் உள்ளதால் இவர் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.