நமது 16 வது நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவரே கிடையாது என்று முடிவு செய்து உள்ளார் அவை தலைவர் சுமித்ரா மஹாஜன் . இந்த முடிவை அவர் கடந்த கால நடைமுறைகளை வைத்து எடுத்து உள்ளார் .ஒரு கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற நாடாளுமன்ற விதிகளின் படி மொத்த உள்ள 543 இடங்களில் 10 சதவீத இடங்களை பெற வேண்டும் , அதாவது 54 இடங்கள். இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி பெற்று இருப்பதோ 44 இடங்கள் . அதனால் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலைக்கு தள்ளபட்டு உள்ளோம்.
இது காங்கிரஸின் மிக மோசமான தோல்வி. இதற்கு முன்பும் இது போல் நடந்து உள்ளது ஆனால் அப்போது காங்கிரஸ் ஆளும் கட்சி இப்போது எதிர்க்கட்சி. இப்போது வெளியுறவு அமைச்சராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் கடந்த முறை எதிர் கட்சி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்றாலும் 67 உறுப்பினர்களுடன் ராஜ்ய சபாவில் எதிர் கட்சி தலைவர் பதவியை பெற்று உள்ளது காங்கிரஸ். இப்பதவிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாப் நபி ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த முறை சுகாதார துறை அமைச்சராக இருந்தவர்.
எதிர் கட்சி தலைவர் என்று ஒருவர் இருந்தால் தான் அது சிறந்த ஜனநாயகம் ஆகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.