கடந்த வியாழக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு தாக்கப்பட்டது. இதில் பயணம் செய்து கொண்டு இருந்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி கட்டைகளாக இருந்தனர். இந்த தாக்குதல் உக்ரைன் பகுதியில் நடந்தது. இதற்கு காரணமானவர்கள் யார் என்று தெரியவில்லை. இதனை செய்ததாக உக்ரைன் அரசும் ரஷிய அரசும் மாற்றி மற்றி குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த தாக்குதலில் இறந்தவர்களில் 193 பேர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் நெதர்லாந்தை சேர்ந்த 17 வயது மாணவி எஸ்மிய்க் டி போர்ஸ்டம் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் தனது மகளை கொலை செய்ததற்காக நன்றி என்று ரஷிய அதிபர் விளாதிமர் புதினுக்கு அதிர்ச்சி தரும் கடிதம் ஒன்றை அவளது தந்தை எழுதி உள்ளார். தனது மகளை கொலை செய்ததற்காக ரஷிய அரசக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் அரசுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். அடுத்த ஆண்டு அவரது மகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு சிவில் இன்ஜினியரிங் படிப்பதாக இருந்தார். அவரது கனவை கலைத்து விட்டதாக அவர்கள் கர்வமாக சொல்லி கொள்ளலாம் என்றார். மீண்டும் அவர்களுக்கு நன்றி என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.