மத்திய அரசின் உத்தரவு படி இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடைபிடிக்க கூடாது என்று ஜெயலலிதா உத்தரவ்ட்டார். இப்போது இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா, கருணாநிதி என்பது சமஸ்கிருத மொழிப்பெயர்கள் , அதனை எதிர்க்கும் இவர்கள் இருவரும் தங்கள் பெயரை மாற்றி கொள்ள வேண்டியது தானே ? சமஸ்கிருத மொழி என்பது எதிர்காலத்தின் மொழி, இது தான் கணினிக்கு ஏதுவான மொழி என நாசாவே அடையாளம் கண்டுள்ளது என பெருமை கூறுகிறார்.
சமஸ்கிருத மொழி வேண்டுமானால் எதிர்காலத்தின் மொழியாக இருக்கலாம், ஆனால் தமிழ் என்பது உலகின் எல்லா மொழிகளும் தோன்றுவதற்கு முன்பு தோன்றிய மொழி . முதலில் அதனை மதிக்க கற்று கொள்ளுங்கள் சுப்ரமணிய சுவாமி.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.