தமிழக நெடுஞ்சாலைகளில் செல்லும் போது அனைத்து உணவு பொருட்களையும் நாமே கொண்டு சென்று விட வேண்டும். இல்லையெனில் அங்கு கிடைக்கும் உணவும் கேடு, கையில் இருக்கும் பணமும் கேடு. அங்கு இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிடும் டிரைவருக்கும், கண்டக்டருக்கும் எல்லாமே இலவசம் தான். அது மட்டும் இல்லாமல் அவர்கள் செல்லும் வழியில் உள்ள டோல் பூத்துகளில் இவர்களே பணம் கட்டி விடுகிறார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது மட்டும் பயணிகள் தான். தரமற்ற உணவு கிடைக்காமல் அவர்கள் திண்டாடுகிறார்கள். இந்நிலையில் அங்கு அம்மா உணவகம் வந்தால் பயணிகளுக்கு நல்ல வசதியாக இருக்கும். ஏனென்றால் அங்கு கிடைக்கும் உணவு தரமானவையாகவும், விலை மலிவாகவும் இருக்கும். இந்த முடிவை அம்மா விரைவில் எடுக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கை ஆகும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.