தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் தெலுங்கானாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற சர்வே எடுக்க உத்தரவிட்டுள்ளார், இது குறித்து கடும் விமர்சனங்கள் கிளம்பின, இது தெலுங்கானா அல்லாத பிற பகுதி மக்கள் உரிமைகளை பறிக்க செய்யும் செயல்களுக்காக தான் என்று கூறினார்கள், மேலும் சந்திரசேகரராவை ஹிட்லர் என சிலர் விமர்சித்தனர்.
இது குறித்து பேசிய சந்திரசேகர ராவ் தன்னை சிலர் ஹிட்லர் என்று வர்ணிப்பதைப் பற்றி கவலையே படவில்லை. ஆமாம், நான் ஹிட்லர்தான். தேவைப்பட்டால் ஹிட்லரை விட படு மோசமாகவும் இருப்பேன் என்று கூறியுள்ளார் மேலும் தெலுங்கானா மாநில மக்கள் குறித்த சர்வே மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும், தேவைப்படுவோருக்கு தேவைப்படும் திட்டங்கள் உதவிகள் சென்று சேரவும் உறுதி செய்யவே இந்த சர்வே என்று ராவ் விளக்கியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.