தருமபுரியில் பள்ளிகளுக்கு இடையேயான டி.டி.சி.ஏ. கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகள் வருகிற டிச.18ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் எஸ்.மார்ட்டின்ராஜ் வெளியிட்ட அறிக்கை: இம்மாத கடைசி வாரத்தில் 14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற உள்ளது. தருமபுரி வருவாய மாவட்டத்துக்குள்பட்ட பள்ளிகள் மட்டுமே பங்கேற்கலாம். வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு, கோப்பை அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகள் வருகிற டிச.18ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் 94434-64935 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.