2009ம் ஆண்டு இந்த நாட்களில் மே 18ம் தேதிகளில் முள்ளிவாய்க்காலில் வைத்து தமிழர்களை கொன்று குவித்த படுகொலைகள் நடந்தேறியது. சிங்கள பேரினவாத ராணுவம் பல்லாயிரம் தமிழ்மக்களையும் புலிகளின் தலைமையயும் கொடூரமாக கொன்று குவித்தது, ஆயுத உதவி, உளவு உதவி மற்றும் புலிகளை முடக்க சிங்களத்துக்கு அனைத்துவிதமான ராஜதந்திர உதவிகளையும் செய்து போரை தங்கு தடையின்றி நடத்த உதவிய காங்கிரஸ்க்கும் அதன் கூட்டணி திமுகவுக்கும்
அங்கே சிங்களவன் தமிழர்களை கொன்று குவித்த நேரத்தில் இங்கே பெரும் அளவில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை வழங்கிக்கொண்டிருந்தார்கள் தமிழர்களும்.
முள்ளிவாய்க்கால் படுகொலை முள்வேலிக்குள் முடக்கப்பட்ட எம் தமிழனத்துக்கு என்றாவது ஒருநாள் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.