BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 30 July 2013

ராயல தெலுங்கான அறிவிப்பு இன்றிரவு? மாநிலம் முழுதும் துணை ராணுவப்படை குவிப்பு. ஐதராபாத் யூனியன் பிரதேசமாகிறதா?

ராயல தெலுங்கான அறிவிப்பு இன்றிரவு? மாநிலம் முழுதும் துணை ராணுவப்படை குவிப்பு. ஐதராபாத் யூனியன் பிரதேசமாகிறதா?

தனித்தெலுங்கானா கோரி நடந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் நேரத்தில் காங்கிரஸ் தன் கட்சி நலனுக்காக தனது கட்சிக்கு செல்வாக்கு கிடைக்க வேண்டும் என்று தெலுங்கானாவை சேர்ந்த 10 மாவட்டங்களுடன் ராயலசீமாவை சேர்ந்த 2 மாவட்டங்களையும் இணைத்து 12 மாவட்டங்கள் கொண்ட ராயல தெலுங்கானா என்று அமைக்க முடிவெடுத்துள்ளது, இதை கடுமையாக எதிர்க்கின்றனர் தெலுங்கானா அமைய போராடியவர்கள், இதற்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தெலுங்கானாவில் இணைக்க கோரும் பிரச்சினைக்குறிய ஐதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக மாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது, யாருக்கும் திருப்தி இல்லாத தால் இது போன்று பிரித்தால் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால் அதை கட்டுப்படுத்த மாநிலம் முழுவது துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

# காங்கிரஸ் கட்சியின் சுயநலத்துக்கு அளவே இல்லை போல


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media