BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 11 August 2013

திருப்பதிக்கு 2 நாட்கள் வராதீர்கள் - திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் 2 நாள் வராதீர்கள் - திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு, தெலுங்கானா பந்த், ராமதாஸ் கோரிக்கை

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பெரும் பக்தர்கள் கூட்டம் கூடியிருப்பதாலும், அவர்கள் நீண்டநேரம் வரிசையில்  காத்திருப்பதாலும் அடுத்த 2 நாட்களுக்கு திருப்பதி வருவதை தவிர்க்கலாம் என திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை தனி தெலங்கானாவுக்கு எதிராக போராட்டம் நடப்பதாலும் எச்சரிக்கையாக திருப்பதி பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து பிரித்து ஆந்திராவில் இணைக்கப்பட்ட சித்தூர், நகரி, காளஹஸ்தி, திருப்பதி போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்குமாறு டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார். இந்த கோரிக்கை வலுவாகும் சீமந்திரா, தெலுங்கானா பிரச்சினையில் தற்போது அமுங்கி கிடக்கும் இந்த கோரிக்கை பெரிதானால் அது மாநில உறவுகளிடையே சிக்கல் ஏற்படுத்தும். அதே சமயம் ஆந்திராவிடம் தமிழகம் இழந்த பகுதிகளை மீட்க கிடைத்த ஒரு வாய்ப்பு தான் இது என்பதையும் மறுப்பதற்கில்லை.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media