BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 12 August 2013

நரிக்குறவர்களை ஆதி திராவிடர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் - கருணாநிதி

ஆதி திராவிடர் நல அமைச்சர் கிஷோர் சந்திர தியோ அவர்களுக்கு இன்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்கள் இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

வரலாற்று சான்றின் படி ஆதி திராவிடர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நரிக்குறவர்கள் இன்றளவும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கியே உள்ளனர், அவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் இல்லையாதலாம் அவர்கள் ஒரே இடத்தில் தங்காமல் நாடோடிகள் போல் அடிக்கடி தங்களது இருப்பிடத்தை மாற்றி கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

1970 ல் தி.மு.க ஆட்சியின் போது அவர்களுக்கு நிரத்தர இருப்பிடம் அமைக்க தி.மு.க அரசாணை இட்டது, பின் 2008/2009 ந் போது அவர்களுக்கு நலவாரியத்தின் மூலம் மேலும் இருப்பிடங்கள் அமைத்து தர அரசு உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கி இருக்கும் நரிக்குறவர்களை ஆதி திராவிட பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அது அவர்களது கல்வி வளர்ச்சிக்கு உதவும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media