BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 12 August 2013

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வருமா?

கடந்த சில நாட்களாகவே காஷ்மீர் கிஸ்த்வார் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே பெரும் மோதம் நடந்து வருகிறது, இரண்டு நாட்களாக அப்பகுதியில் காஷ்மீர் அரசு ஊரடங்கு ஒத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் காஷ்மீர் கலவரத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் சஜ்ஜத் அகமத் ராஜினாமா செய்திருந்தார்

இன்று நடந்த மக்களை கூட்டத்தில் பா.ஜ.க சார்பில் பேசிய அருண் ஜெட்லி. காஷ்மீர் கலவரத்தை சுட்டிக்காட்டி காஷ்மீர் அரசை கலைத்து அங்கே ஜனாதிபதி ஆட்சி நடக்க வேண்டும் என்றும் இப்போதிருக்கும் ஒமர் அப்துல்லா தலைமையிலான ஆட்சி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பத்திரிக்கையாளர்களிடம் பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா. நடந்த கலவரத்தால் ஒரு இந்து இரண்டு முஸ்லீன் என மூன்று பேர் உயிரிழந்தனர், அதற்காக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன், ஆனால் 2002 ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு அப்போது அங்கே ஆட்சியில் இருந்த பா.ஜ.கவில் இருந்து யார் ராஜினாமா செய்ய முன்வந்தார்கள் என அருண் ஜெட்லி விளக்க வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே மதம் மாறிய கிறிஸ்தவர்களை தாழ்த்தபட்டவர்கள் பட்டியலில் சேர்க்க தேவையில்லை என்று கூறி சிறுபான்மையினரின் கோவத்துக்கு ஆளாகியுள்ள பா.ஜ.க தற்பொழுது உமர் அப்துல்லாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media