BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 21 August 2013

கொலையில் முடிந்த கொழயடி சண்டை

மதுரை சோழவந்தான் மேலக்கால் பகுதியில் செல்லம்மாளும் அவரது மகள் முருகேஸ்வரியும் வசித்து வந்தனர். இருவரும் கணவரை இழந்து கூலி வேலைக்கு சென்று தனியாக வசிந்து வந்தனர். அப்பகுதியில் இவர்களிடம் யாரும் வாய் கொடுத்து ஜெயிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு ரவுடி பெண்களாக வாழ்ந்து வந்தனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



நேற்று அதிகாலை இவர்கள் இருவரும் அவர்கள் வீட்டின் முன் கொடூரமாக கொலைசெய்யப்பட்டனர், இருவரது உடலிலும் சராமாரியான கத்திகுத்துகள் இருந்தன. விரைந்த வந்த காவல்துறை மோப்பநாயை வைத்து குற்றவாளியை தேடியது.

மோப்பநாய் அருகில் இருந்த முனியாண்டி என்பவரது வீட்டில் சென்று படுத்துக்கொண்டது. முனியாண்டியை பிடிக்க காவல்துறை உத்தரவிட்டு தேடிவந்த நிலையில் முனியாண்டி நேற்று மதியம் மதுரை கோர்டில் சரணடைந்தார், அவரை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

இறந்த செல்லம்மாள் மற்றும் அவரது மகள் முருகேஸ்வரிக்கு அப்பகுதி பல ரவுடிகளுடன் தொடர்பிருப்பதாக தெரிகிறது. இக்கொலைக்கு வேறொதுவும் பிண்ணணி இருக்கிறது என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media