விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார் ரமேஷ், அதே காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரமேஷ்பாபு, இவர் காவலர் ரமேஷை சாதிபெயர் சொல்லி திட்டுவதாகவும், உடன் பணிபுரிபவர்கள் மத்தியில் அவமானபடுத்துவதாகவும் புகார் செய்து விழுப்புரம் எஸ்.பியிடம் தனது சீருடையை கழட்டி கொடுக்க வந்திருந்தார்.
ஏற்கனவே உன் சாதிகாரன் நாலு பேரை இந்த ஸ்டேசனை விட்டு துரத்தியிருக்கிறேன், உன்னையும் துரத்துவேன் என்று மிரட்டியதாகவும், உனக்கெல்லாம் எதுக்குடா பைக்கு அதை எங்கிட்டு கொடுத்துரு என்றும் சொல்லியிருக்கிறார். இது ஒன்றும் அரசாங்க வண்டி இல்லை, எனது சொந்த காசில் வாங்கியது என்றவரை சாதி பெயர் சொல்லி திட்டியிருக்கிறார்.
பணிமாற்றம் ஆகி வேற ஊரில் போய் வேலை செய்வதை விட இந்த சீருடைய கழற்றி கொடுத்துவிட்டு கூலி வேலைக்கு போய் பொழச்சுகுவேன் என்ற பத்திரிக்கையாளர்களின் பேசும் போது சொல்லியிருக்கிறார். இவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசி கொண்டிருக்கும் பொழுது இரு காவலர்கள் அவரை தரதரவென்று இழுத்து சென்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.