BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 26 August 2013

இலங்கை இறுதிப்போரில் இந்திய கொடி தாங்கிய கப்பல்.

இலங்கையில் நடந்த இறுதி புத்தத்தின் போது ராணுவத்தினரிடம் சரணடந்த கைதிகள் சிலர் காணாமல் போயுள்ளனர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டுமென இலங்கை நீதிமன்றத்தில் காணாமல் போனவர்களில் உறவினர்கள் ஐந்து ஆட்கொணர்வு மனு கொடுத்திருந்தனர், தற்பொழுது மேலும் ஏழு ஆட்கொணர்வு மனு புதிதாக கொடுக்கபட்டுள்ளது.

இம்மனுவில் சம்பவங்களை விளக்கியிருக்கும் மனுதாரர், இறுதி யுத்தத்தின் போது வான்வழியாக இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளையும், ராசாயன குண்டுகளையும் வீசியது, அங்கிருந்த மக்கள் உடல் விகாரமாகி, துடிதுடித்து இறந்ததை கண்ணால் கண்டதாக சொல்லியிருக்கின்றனர்.

மேலும் அதிர்ச்சியூட்டும் தகவலாக வான்வழியாக இலங்கை ராணுவம் தாக்கி கொண்டிருந்த பொழுது கடற்கரை பகுதிகளில் இந்திய கொடி ஏந்திய கப்பல்கள் எங்கள் மேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது என்று கூறியுள்ளனர், இதுகுறித்தான தகவல்கலை இலங்கை மூத்த வழக்கறிஞர் கே.எஸ் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை செப்டம்பர் பனிரெண்டாம் தேதிக்கு தள்ளி வைத்தது, ஏற்கனவே உலக நீதிமன்றத்தில் இலங்கை போர் விதியை மீறியதற்கான வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, இலங்கை போரில் இந்தியா கலந்து கொண்டது உறுதியானால் போர் விதியை மீறிய குற்றத்திற்கு இந்தியாவும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media