BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 19 August 2013

இலங்கையில் காமென் வெல்த் மாநாடு

இலங்கையில் காமென் வெல்த் மாநாடு

2013 ஆம் ஆண்டுக்கான காமென்வெல்த் மாநாடு இலங்கையில் ராஜபக்‌ஷே தலைமையில் நடக்கிறது, அங்கே நடந்த முடிந்த அடுத்த இரண்டு வருடத்திற்கு காமென்வெல்த் மாநாடு ராஜபக்‌ஷே தலையிலேயே நடக்கும்.

ஈழ தமிழர்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கியது, இந்தியா பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் போரில் ஈடுபட்டபோது இலங்கை எதிரி நாடுகளுக்கு ஆதரவாக இருந்தது, இலங்கை இந்தியாவுக்கு என்றும் நட்பு நாடு இல்லை, ஆகவே பிரதமர் இலங்கையில்நடக்கும் காமென்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.

மதிமுக தலைவர் வைகோவும் இலங்கையில் நடக்கும் காமென்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்பதோடு மட்டுமல்லாது, இலங்கையில் காமென்வெல்த் மாநாடே நடக்கக்கூடாது அதற்கு இலங்கை தகுதியான நாடில்லை என்று ஐ.நா சபைக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் பீரிஸ் இன்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து காமென்வெல்த் மாநாட்டிற்கான அழைப்பிதளை வழங்கினார், இந்திய தன்னார்வ தொண்டுகள் சார்ப்பில் பேசியவர்கள் இலங்கையில் போர் விதிகளை மீறியது குறீத்து பொதுவில் மன்னிப்பு கேட்க முடியுமா என கேள்வி வைத்தனர்.

நாடாளுமன்ன்ற உறிப்பினர் நாராயணசாமி கருத்து தெரிவிக்கையில், இதுகுறித்து பிரதமர் நல்லதொரு முடிவு எடுப்பார் என கூறினார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media