வன்னியர்களை அவதூறாக பேசியதாக அமைச்சர் மற்றும் நடிகர் ஆனந்த்ராஜ் மீது போலிசில் பாமக புகார் அளித்துள்ளது.
சனிக்கிழமை அன்று வந்தவாசியில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் மற்றூம் நடிகர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு பேசினார். நடிகர் ஆனந்த்ராஜ்க்கும் பாமகவுக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம், பாண்டிச்சேரியில் பல ஒயின்ஷாப்களின் ஓனரான ஆனந்த்ராஜ் பேனர்கள், படங்களை கிழிப்பது பாமகவின் பொழுது போக்கு என்றால் பாமகவை வகைதொகையில்லாமல் பேசுவது ஆனந்த்ராஜ்ஜின் பொழுது போக்கு.
சனிக்கிழமை அதிமுக கூட்டத்தில் ஆனந்தராஜ் பேசுகையில்,டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதனால் அங்கு கூடிய பாமகவினர் மேடை அருகே சென்று ஆனந்தராஜுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து எழுந்த அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், வன்னியர் சமுதாயத்தினரைப் பற்றியும், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் குறித்து கடுமையாக பேசியதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து இன்று பாமகவினர் வந்தவாசி காவல்நிலையத்தில் அளித்த புகாரில் வன்னியர் சமுதாயத்தினரையும், பாமக தலைவர்களையும் அவதூறாகப் பேசியதாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், நடிகர் ஆனந்தராஜ் ஆகியோர் பேசியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
# அதே இடத்தில் அடுத்த வாரம் பாமக கூட்டம் நடத்தினால் அமைச்சரும், ஆனந்த்ராஜ்ம் காது கொடுத்து கேட்க முடியாது
சனிக்கிழமை அன்று வந்தவாசியில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் மற்றூம் நடிகர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு பேசினார். நடிகர் ஆனந்த்ராஜ்க்கும் பாமகவுக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம், பாண்டிச்சேரியில் பல ஒயின்ஷாப்களின் ஓனரான ஆனந்த்ராஜ் பேனர்கள், படங்களை கிழிப்பது பாமகவின் பொழுது போக்கு என்றால் பாமகவை வகைதொகையில்லாமல் பேசுவது ஆனந்த்ராஜ்ஜின் பொழுது போக்கு.
சனிக்கிழமை அதிமுக கூட்டத்தில் ஆனந்தராஜ் பேசுகையில்,டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதனால் அங்கு கூடிய பாமகவினர் மேடை அருகே சென்று ஆனந்தராஜுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து எழுந்த அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், வன்னியர் சமுதாயத்தினரைப் பற்றியும், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் குறித்து கடுமையாக பேசியதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து இன்று பாமகவினர் வந்தவாசி காவல்நிலையத்தில் அளித்த புகாரில் வன்னியர் சமுதாயத்தினரையும், பாமக தலைவர்களையும் அவதூறாகப் பேசியதாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், நடிகர் ஆனந்தராஜ் ஆகியோர் பேசியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
# அதே இடத்தில் அடுத்த வாரம் பாமக கூட்டம் நடத்தினால் அமைச்சரும், ஆனந்த்ராஜ்ம் காது கொடுத்து கேட்க முடியாது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.