BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 19 August 2013

சேசாசலம் என்ற பெரியார்தாசன் என்ற சித்தார்த் என்ற அப்துல்லா மரணடைந்தார்...

பச்சையப்பன் கல்லூரியில் தத்துவயியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அப்துல்லா(பெரியார்தாசன்) அவர்களின் இயற்பெயர் சேசாசலம், சிறி வயதில் பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்டு நாத்திகனாக தமது பெயரை பெரியார்தாசன் என்று மாற்றிக்கொண்டர்.

சிறந்த மேடைப்பேச்சாளரான இவர். கருத்தம்மா, காதலர் தினம் போன்ற வெற்றி படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர், இவர் தீடிரென தொலைகாட்சியில் எண் கணித ஜோதிடம், ராசிகல் விளம்பரங்களில் வந்தது பலருக்கு அதிச்சியாக இருந்தது, பிற்பாடு தாம் புத்த மதத்தை தழுவி விட்டதாகவும், தமது பெயரை சித்தார்த் என்று மாற்றி கொண்டதாகவும் கூறினார்.

அது அவரது தனிபட்ட விருப்பம் என்பதால் பலர் அதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை, பலருக்கு தெரியவும் தெரியாது. 12.03.2010 அன்று ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாகவும், குரான் குறித்து தாம் 10 வருடமாக ஆராய்ச்சி செய்வதாகவும், அதன் மேல் நம்பிக்கை கொண்டே இஸ்லாமுக்கு மாறுவதாகவும் கூறினார்.

இது குறித்து பரவலான கருத்துக்கள் மக்களிடயே பேசப்பட்டது. இந்நிலையில் உடல்நிலை குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்துல்லா(பெரியார்தாசன்) நேற்று இரவு மரணமடைந்தார்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media