BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 9 August 2013

தமிழகத்தில் அதிகாரிகளின் நிலை என்ன?

கடந்த 2012 ஆண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சிதலைவர்
திரு.பாலாஜி மாற்றப்பட்டார்.
(சத்துணவு பணியாளர் நியமனத்தில் சட்டப்படி
வெளிப்படை முறையை கொண்டு வந்ததால்
-ஒரு வாரத்தில் மாற்றம்)

கடந்த 2012- மாதத்தில் மதுரை மாவட்ட ஆட்சிதலைவர்
திரு.சகாயம் மாற்றப்பட்டார்.
(கிரானைட் நிறுவனங்களின் இரண்டு ஊராட்சியில் மட்டும் 16,000 கோடி ஊழல்களை கண்டுபிடித்து, வெளியே கொண்டு வந்ததால்- 80 மணி நேரத்தில் மாற்றம்)

கடந்த 2011ஆண்டில் ஈரோடு மாவட்ட ஆட்சிதலைவர்
திரு.ஆர்.ஆனந்தகுமார் மாற்றப்பட்டார்.
(காளிங்கராயன் கால்வாயை மாசுபடுத்தி வந்த ஈரோடு
கே.கே. எஸ்.கே உட்பட தோல் தொழிற்சாலைகளை
இழுத்து மூடியதால் - 30 மணி நேரத்தில் மாற்றம்)

கடந்த 2010- மாதத்தில் நாமக்கல்மாவட்ட
ஆட்சிதலைவர் திரு.சகாயம் மாற்றப்பட்டார்.
(ஊழல் செய்யும் வி.ஒ.ஏ.க்கள்&
அதிகாரிகள் மீது நடவடிக்கை;
நாமக்கல் மாவட்டத்தில்
வெளிப்படையான நிர்வாகம்
கொண்டு வந்து ,தி.மு.க. மத்திய மந்திரி
காந்திசெல்வன், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியை மற்றும் கட்சிகாரர்களை, எவ்வித ஊழல் நடவடிக்கைக்கும் அனுமதிக்காதது,
கொல்லிமலையில் மால்கோ நிறுவனம்
மலையை வெட்டியதை நிறுத்தியது).

தற்பொழுது தூத்துகுடி ஆட்சியர்.

தமிழகத்தில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் பெரு முத(லை)லாளிகளின் கையில் தான் ஆட்சி இருக்கிறது, அவர்கள் வைத்தது தான் சட்டமாகவும் இருக்கிறது. இந்தியாவை ஆள்வது அம்பானி சகோதர்கள் தான் என்ற போது நம்பாத நாம், இப்பொழுது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதற்கு என்ன மாதிரியாக பதில் சொல்ல போகிறோம்.

நாம் வாழ்ந்து விட்டோம், நமது தலைமுறைக்கு என்ன விட்டு செல்ல போகிறோம். தமிழ்கத்தை சுடுகாடாக்கி விட்டு பெரும் பணத்துடன் இந்த பெரு முத(லை)லாளிகள் வேறு இடத்த்தை கொள்ளை அடிக்க சென்று விடுவார்கள், ஏனென்றால் மொத்த உலகமும் பணத்திற்கு அடிமையாக தான் இருக்கிறது, இருக்கும் கொஞ்சநஞ்ச நேர்மையான அதிகாரிகளையும் இந்த பணம் காவு வாங்கி விடுகிறது.

# தேர்தல் மிக அருகாமையில் உள்ளது


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media