BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 9 August 2013

மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

இன்று நேற்றல்ல கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டினார்கள் என்று கொடூரமான முறையில் கொன்றும்,  கைது செய்து பல மாதங்கள் இலங்கை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் தி.மு.க வும், அ.தி.மு.க வும் பிரதமருக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறார்களே தவிர இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது போல் தெரியவில்லை, தற்ச்சமயம் கூட தமிழக மீனவர்கள் 46 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

மத்திய அரசின் சார்பாக பதில் சொல்லும் நாராயணசாமி(15 நாள்) தமிழக அரசு எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்று தமிழக அரசின் மீது குற்றம் சாட்டி செல்கிறார், தமிழக அரசோ என்றோ தாரை வார்த்த கச்சதீவு தான் எல்லாவற்றிற்கும் காரணம், அப்பொழுது ஆட்சியில் இருந்தது தி.மு.க என இந்த நெருக்கடியிலும் அரசியல் லாபி செய்கிறது.

வெளிநாட்டில் தாக்கப்படும் ஒரு மாணவன் இந்தியனாக இருந்தால் உடனே அந்த நாட்டை கண்டித்து அறிக்கை விட வாய் திறக்கும் மன்மோகன் சிங் தமிழக மீனவர்கள் என்றால் மெளனமோகன் சிங்காகி விடுகிறார்.

இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 13 மீனவ அமைப்பு எங்களது மீனவ நண்பர்களை திரும்ப மீட்கும் வரை வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து இருக்கிறது, இவர்களுக்கு மேலும் பல மீனவ அமைப்புகளின் ஆதரவு கூடும் என தெரிகிறது, எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அசராமல் அரசியல் செய்யும் மத்திய அரசும், மாநில அரசும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்பதே ஒவ்வொரு தமிழனின் விருப்பமாக இருக்கிறது.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media