BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 9 August 2013

எதிர்ப்பு வலுக்கும் தனி தெலுங்கானா

1956 ஆம் ஆண்டு ஹைதராபாத் தலைமையில் தமிழ்கத்தின் சில பகுதிகளையும் சேர்த்து மொழி வாரியாக பிரிக்கபட்ட முதல் மாநிலமாக ஆந்திரா பிரிந்தது. மக்கள் தொகை அடிப்படையில் இது ஐந்தாவது பெரிய மாநிலமாகவும், தென் இந்தியாவின் பெரிய மாநிலமாகவும் விளங்கி வந்தது

சில கடந்த சில ஆண்டுகளாகவே தனி தெலுங்கானா வேண்டும், ஆந்திராவிலிருந்து பிரித்து, தனி மாநிலமாக எங்களை அறிவிக்கவேண்டும் என அப்பகுதி மக்களும், அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்

கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் தனி தெலுங்கானா இந்தியாவின் 29 வது மாநிலமாக உருவாகும் என அறிவிக்கபட்டது.

அதை தொடர்ந்து தனி தெலுங்கானா பிரியக்கூடாது என ஆந்திராவெங்கும், தற்பொழுது தனி தெலுங்கானா உருவானால் அதனுடன் சேர்க்கப்படும் ஆந்திர கடலோர மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தற்பொழுது ஆந்திராவில் தமிழர்கள் 60% வாழும் பகுதியான சித்தூர், விஜயபுரம் போன்ற பகுதிகளில் தனி தெலுங்கானா பிரிப்பது தான் இறுதி முடிவென்றால் எங்களை தமிழகத்துடன் இணைத்து விடுங்கள் என்று தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் தலைவலியாக உருவாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media