BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 9 August 2013

சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய பாமாகவினர்

உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சுங்க சாவடியில் இன்று பாமகவினரின் கார் சுங்க சாவடியை தாண்டி செல்ல கால தாமதமானதால் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் சிலர் சுங்கசாவடியில் இருந்த கணிணி மற்றும் ஊழியர்கள் இருக்கும் அறையையும் கடுமையாக தாக்கினர்

இதில் சுங்க சாவடியை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்ததாக தகவல் வந்துள்ளது, ஊழியர்கள் காவல்துறையினரிடம் நாங்கள் வழக்கம் போலவே எங்கள் பணியை செய்து கொண்டிருந்தோம், அவர்கள் வாகனத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்த வாகனத்தில் சுங்க பணத்தை வசூல் செய்து கொண்டிருந்த நேரம் அவர்களை காக்க வைக்க வேண்டுமென்றே செய்ததில்லை, நாங்கள் எப்போதும் செய்யும் பணி தான் அது என்று சொல்லியுள்ளார்கள்.

அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ளதால் அதை வைத்து பா.ம.க வினர் மூன்று பேர் கைது செய்யபட்டனர், மேலும் அன்புமணி ராமதாஸ் மீதும் வழக்கு பதிவு செய்யபட்டிருப்பதாக தகவல் தெரிகிறது.

ஊழியர்கள் அறிக்கையில் காரின் உள்ளிருந்தவர் அன்புமணி ராமதாஸ் போல் தெரிந்தார் என்று தான் தெரிவுத்து உள்ளனர், உறுதியாக எதுவும் சொல்லாத நிலையில் அன்புமணி ராமதாஸின் மீது வழக்கு பதிவு செய்யபட்டிருப்பது அப்பகுதி பா.ம.கவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆனாலும் சேலத்தில் இருந்து சென்னை திரும்பி கொண்டிருந்தார் அன்புமணி ராமதாஸ் என்ற செய்தி மட்டும் தற்பொழுது உறுதி செய்யபட்டுள்ளது.

# தமிழ்நாட்டை அமைதியா இருக்க விட மாட்டாங்க போலயே




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media