தமிழக அரசின் 10 கோடி பண உதவியில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் ஜூகல்பந்தி என்று நீண்ட நேரமாக பின்னணிப் பாடகர்கள் மைக்கைப் பிடித்து பாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது விழா அரங்கத்தில் இருந்த பிரபல தெலுங்கு திரைப்பட டைரக்டரான ஆர்.நாராயணமூர்த்தி திடீரென்று மேடையில் ஏறினார். “இது சினிமா நூற்றாண்டு விழாவா? அல்லது இசை நிகழ்ச்சியா?” ரொம்ப நேரமா பாடிக்கிட்டே இருக்கீங்க..? என்று டென்ஷனில் கத்திக் கொண்டே அங்கே பாடிக் கொண்டிருந்த பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் இருந்து மைக்கை பிடுங்க முயற்சி செய்தார். அவரது செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் எஸ்.பி.பி.
இதனால் செய்வதறியாது திகைத்த விழாக்குழுவினர் வேறு வழியின்று அவரை விழா நடக்கும் அரங்கத்தை விட்டு வெளியேற்றினார்கள். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் ஜூகல்பந்தி என்று நீண்ட நேரமாக பின்னணிப் பாடகர்கள் மைக்கைப் பிடித்து பாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது விழா அரங்கத்தில் இருந்த பிரபல தெலுங்கு திரைப்பட டைரக்டரான ஆர்.நாராயணமூர்த்தி திடீரென்று மேடையில் ஏறினார். “இது சினிமா நூற்றாண்டு விழாவா? அல்லது இசை நிகழ்ச்சியா?” ரொம்ப நேரமா பாடிக்கிட்டே இருக்கீங்க..? என்று டென்ஷனில் கத்திக் கொண்டே அங்கே பாடிக் கொண்டிருந்த பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் இருந்து மைக்கை பிடுங்க முயற்சி செய்தார். அவரது செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் எஸ்.பி.பி.
இதனால் செய்வதறியாது திகைத்த விழாக்குழுவினர் வேறு வழியின்று அவரை விழா நடக்கும் அரங்கத்தை விட்டு வெளியேற்றினார்கள். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.