தொடர்ந்து 4 நாட்கள் சென்னையில் நடைபெறும் இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு விழாவை இன்று துவங்கி வைத்துப் பேசினார் தமிழக முதல்வர் ஜெ.
அப்போது அவர் ‘விஸ்வரூபம்’ படத்தை மனதில் வைத்து தயாரிப்பாளர்கள் “சாதி, மற்றும் மத ரீதியிலான வகையில் பிறர் மனம் புண்படாமல் இருக்கும் படங்களை எடுக்க வேண்டும்” என்றும், கருணாநிதியை மனதில் வைத்து “கடந்த 2 வருடங்களாகத்தான் தமிழ்சினிமா சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது” என்றும் பேசினார்.
மேலும் வழக்கம் போல ஒரு ‘குட்டி’க் கதையும் சொல்லி கருணாநிதியை அவர் காய்ச்சி எடுக்கவும் தவறவில்லை
இதோ அவருடைய பேச்சின் முழு வடிவம் :
கடந்த 2 ஆண்டுகளாக எனது ஆட்சியில் திரைப்படத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. வந்தாரை வாழ வைக்கும் பூமி தமிழ்நாடு. இன்று கூட பல்வேறு மொழி பேசும் நடிகர், நடிகைகள், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணியில் இருக்கிறார்கள்.
தாமும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்சினிமாத்துறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இந்த உலகத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் உண்டு. தானும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. எப்படியாவது தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் எப்போதும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறவர்களை மட்டுமல்லாமல், தனக்கு போட்டியாக இருப்பவர் எனக் கருதப்படுபவரையும் அழித்து விட வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஒரு ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் நிறைய பாவங்களை செய்ததால் ‘நரகப்படுகுழி’ என்ற கிணற்றில் விழுந்து விட்டார். அந்த கிணற்றில் ஏற்கனவே பாவம் செய்தவர்கள் விழுந்து கிடந்தார்கள். உள்ளே ஏகப்பட்ட சத்தம். இப்பொழுது விழுந்த அந்த மனிதரின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.
அந்த கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு மகான் இருந்தார். இந்த மனிதர் போடுகின்ற சத்தம் அதிகமாக கேட்டதும், கிணற்றை எட்டிப் பார்த்தார் அந்த மகான்.
மகானைப் பார்த்தவுடன் அந்த மனிதர் “சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கத்தினார். அந்த மனிதரைப் பார்த்ததும் மனித சமுதாயத்துக்கு அந்த மனிதர் என்னென்ன கெடுதல் செய்திருக்கிறார் என்ற விபரம் மகானின் கண்முன்னே தெரிந்தது. இருந்தாலும் அந்த மகானைக் காப்பாற்ற ஏதாவது ஒரு வழி உண்டா..? என்று யோசித்தார். ஏதாவது ஒரு நல்ல காரியத்தை அந்த மனிதர் தனது வாழ்நாளில் செய்திருக்கிறாரா..? என்று பார்த்தார்.
ஒருசமயம் அந்த மனிதர் தன் காலடியில் மிதிபட இருந்த சிலந்தியை தன்னையறியாமல் மிதிக்காமல் தாண்டிப்போயிருந்தது தெரிய வந்தது. இந்தச் செயலுக்கு அந்த மனிதரை காப்பாற்ற முடியுமா? என்று சிந்தித்தார்.
உடனடியாக அவர் கையில் சிலந்தி ஒன்று வந்து நின்றது. அதனிடமிருந்து நூலிழை வெளிவர ஆரம்பித்தது. அந்த நூலிழை கிணற்றின் ஆழம் வரைக்கும் நீண்டு கொண்டே போனது.
அந்த மகான் கிணற்றில் இருந்த அந்த மனிதரைப் பார்த்து “இந்த நூலைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வா” என்றார். இதற்கு அந்த மனிதர் “சிலந்தி நூல் என்னைத் தாங்குமா?” என்று கேட்டார். “எல்லாம் தாங்கும் பிடித்து வா” என்றார் அந்த மகான்.
சந்தேகத்துடனே அந்த நூலிழையை இழுத்துப் பார்த்தார் அந்த மனிதர். நூலிழை வழுவாக இருந்தது. எனவே அதைப் பிடித்துக் கோண்டு மெதுவாக ஏறிவர ஆரம்பித்தார். பாதி தூரம் வந்தவுடன் அந்த மனிதரின் காலுக்கு கீழே கொஞ்சம் சத்தம் கேட்டது. கீழே குணிந்து பார்த்தார் அந்த மனிதர். வேறு சிலரும் அந்த நூலிழையை பிடித்துக் கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார்கள்.
உடனே அந்த மனிதருக்கு கோபம் வந்தது. தன் இடுப்பிலுள்ள கத்தியை எடுத்து தன் காலுக்கு கீழே உள்ள நூலிழையை வெட்டி விட்டார். இனிமேல் தான் மட்டும் அந்த நூலிழியில் மேலே ஏறி விடலாம் என்று நினைத்தார் அந்த மனிதர்.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா? மொத்த நூலிழையும் அறுந்து விழுந்தது. அவரும் பொத்தென்று கீழே விழுந்து விட்டார். மறுபடியும் கத்த ஆரம்பித்தார். அவர் தன்னை அறியாமல் செய்த ஒரு நற்செயல் அந்த நூலிழைக்கு உறுதியைக் கொடுத்தது. இப்போது அவர் செய்த அந்தப் பாவம் வலுவிழக்கச் செய்து விட்டது.
அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதருக்கு இருந்திருந்தால் அந்த மனிதர் கரையேறியிருப்பார். ஆனால் அதை அவர் செய்யவில்லை. எனவே அதலப்பாதாளத்தில் விழுந்து விட்டார் அந்த மனிதர்.
திரைப்படத்துறையால் தானும் தன் குடும்பமும் மட்டும் செழிப்படைய வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த நிலைமையில் தான் இன்று இருக்கிறார்கள்.
திரைப்படம் என்பது பல்வேறு கலைஞர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி. என்றாலும் நல்ல கருத்துக்களையும், முற்போக்கு சிந்தனைகளையும், எண்ணங்களையும் இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துச் செல்லும் வகையிலும் சாதி, மற்றும் மத ரீதியிலான வகையில் பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும், வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளை தவிர்த்தும் படங்களை எடுக்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களை இந்த தருணத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதுடன், திரைப்படத்துறைக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெ’ பேசினார். ஆனால் கடைசிவரை என்னென்ன உதவிகள் செய்வேன் என்பதை மட்டும் ஜெ’ சொல்லவே இல்லை.
Thanks to http://www.soundcameraaction.com
அப்போது அவர் ‘விஸ்வரூபம்’ படத்தை மனதில் வைத்து தயாரிப்பாளர்கள் “சாதி, மற்றும் மத ரீதியிலான வகையில் பிறர் மனம் புண்படாமல் இருக்கும் படங்களை எடுக்க வேண்டும்” என்றும், கருணாநிதியை மனதில் வைத்து “கடந்த 2 வருடங்களாகத்தான் தமிழ்சினிமா சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது” என்றும் பேசினார்.
மேலும் வழக்கம் போல ஒரு ‘குட்டி’க் கதையும் சொல்லி கருணாநிதியை அவர் காய்ச்சி எடுக்கவும் தவறவில்லை
இதோ அவருடைய பேச்சின் முழு வடிவம் :
கடந்த 2 ஆண்டுகளாக எனது ஆட்சியில் திரைப்படத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. வந்தாரை வாழ வைக்கும் பூமி தமிழ்நாடு. இன்று கூட பல்வேறு மொழி பேசும் நடிகர், நடிகைகள், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணியில் இருக்கிறார்கள்.
தாமும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்சினிமாத்துறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இந்த உலகத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் உண்டு. தானும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. எப்படியாவது தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் எப்போதும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறவர்களை மட்டுமல்லாமல், தனக்கு போட்டியாக இருப்பவர் எனக் கருதப்படுபவரையும் அழித்து விட வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஒரு ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் நிறைய பாவங்களை செய்ததால் ‘நரகப்படுகுழி’ என்ற கிணற்றில் விழுந்து விட்டார். அந்த கிணற்றில் ஏற்கனவே பாவம் செய்தவர்கள் விழுந்து கிடந்தார்கள். உள்ளே ஏகப்பட்ட சத்தம். இப்பொழுது விழுந்த அந்த மனிதரின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.
அந்த கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு மகான் இருந்தார். இந்த மனிதர் போடுகின்ற சத்தம் அதிகமாக கேட்டதும், கிணற்றை எட்டிப் பார்த்தார் அந்த மகான்.
மகானைப் பார்த்தவுடன் அந்த மனிதர் “சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கத்தினார். அந்த மனிதரைப் பார்த்ததும் மனித சமுதாயத்துக்கு அந்த மனிதர் என்னென்ன கெடுதல் செய்திருக்கிறார் என்ற விபரம் மகானின் கண்முன்னே தெரிந்தது. இருந்தாலும் அந்த மகானைக் காப்பாற்ற ஏதாவது ஒரு வழி உண்டா..? என்று யோசித்தார். ஏதாவது ஒரு நல்ல காரியத்தை அந்த மனிதர் தனது வாழ்நாளில் செய்திருக்கிறாரா..? என்று பார்த்தார்.
ஒருசமயம் அந்த மனிதர் தன் காலடியில் மிதிபட இருந்த சிலந்தியை தன்னையறியாமல் மிதிக்காமல் தாண்டிப்போயிருந்தது தெரிய வந்தது. இந்தச் செயலுக்கு அந்த மனிதரை காப்பாற்ற முடியுமா? என்று சிந்தித்தார்.
உடனடியாக அவர் கையில் சிலந்தி ஒன்று வந்து நின்றது. அதனிடமிருந்து நூலிழை வெளிவர ஆரம்பித்தது. அந்த நூலிழை கிணற்றின் ஆழம் வரைக்கும் நீண்டு கொண்டே போனது.
அந்த மகான் கிணற்றில் இருந்த அந்த மனிதரைப் பார்த்து “இந்த நூலைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வா” என்றார். இதற்கு அந்த மனிதர் “சிலந்தி நூல் என்னைத் தாங்குமா?” என்று கேட்டார். “எல்லாம் தாங்கும் பிடித்து வா” என்றார் அந்த மகான்.
சந்தேகத்துடனே அந்த நூலிழையை இழுத்துப் பார்த்தார் அந்த மனிதர். நூலிழை வழுவாக இருந்தது. எனவே அதைப் பிடித்துக் கோண்டு மெதுவாக ஏறிவர ஆரம்பித்தார். பாதி தூரம் வந்தவுடன் அந்த மனிதரின் காலுக்கு கீழே கொஞ்சம் சத்தம் கேட்டது. கீழே குணிந்து பார்த்தார் அந்த மனிதர். வேறு சிலரும் அந்த நூலிழையை பிடித்துக் கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார்கள்.
உடனே அந்த மனிதருக்கு கோபம் வந்தது. தன் இடுப்பிலுள்ள கத்தியை எடுத்து தன் காலுக்கு கீழே உள்ள நூலிழையை வெட்டி விட்டார். இனிமேல் தான் மட்டும் அந்த நூலிழியில் மேலே ஏறி விடலாம் என்று நினைத்தார் அந்த மனிதர்.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா? மொத்த நூலிழையும் அறுந்து விழுந்தது. அவரும் பொத்தென்று கீழே விழுந்து விட்டார். மறுபடியும் கத்த ஆரம்பித்தார். அவர் தன்னை அறியாமல் செய்த ஒரு நற்செயல் அந்த நூலிழைக்கு உறுதியைக் கொடுத்தது. இப்போது அவர் செய்த அந்தப் பாவம் வலுவிழக்கச் செய்து விட்டது.
அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதருக்கு இருந்திருந்தால் அந்த மனிதர் கரையேறியிருப்பார். ஆனால் அதை அவர் செய்யவில்லை. எனவே அதலப்பாதாளத்தில் விழுந்து விட்டார் அந்த மனிதர்.
திரைப்படத்துறையால் தானும் தன் குடும்பமும் மட்டும் செழிப்படைய வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த நிலைமையில் தான் இன்று இருக்கிறார்கள்.
திரைப்படம் என்பது பல்வேறு கலைஞர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி. என்றாலும் நல்ல கருத்துக்களையும், முற்போக்கு சிந்தனைகளையும், எண்ணங்களையும் இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துச் செல்லும் வகையிலும் சாதி, மற்றும் மத ரீதியிலான வகையில் பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும், வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளை தவிர்த்தும் படங்களை எடுக்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களை இந்த தருணத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதுடன், திரைப்படத்துறைக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெ’ பேசினார். ஆனால் கடைசிவரை என்னென்ன உதவிகள் செய்வேன் என்பதை மட்டும் ஜெ’ சொல்லவே இல்லை.
Thanks to http://www.soundcameraaction.com
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.