BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 September 2013

முன்னாள் ராணுவதளபதி விகே சிங், காஷ்மீர் அரசை கவிழ்க்க முயற்சித்ததாக புகார் - சிபிஐ விசாரணை?

ராணுவம், போலிஸ் போன்ற துறைகளில் ரகசிய நிதி என்று ஒரு குறிப்பிட்டத்தொகை ஒதுக்கப்படும், இந்த நிதிக்கு கணக்கு வழக்கு எதுவும் தர தேவையில்லை.


நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக பதவி வகித்த போது 2010ஆம் ஆண்டு வி.கே.சிங் சிறப்பு உளவுப் பிரிவை ஒன்றை உருவாக்கினார். இந்த சிறப்பு உளவுப் பிரிவை பயன்படுத்தி ராணுவத்தின் ரகசியை நிதியை கொண்டு காஷ்மீரின் ஒமர் அப்துல்லாவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்ததாகவும் தற்போதைய ராணுவ தளபதி பிக்ரம்சிங்குக்கு எதிராக போலி என்கவுண்டர் வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்ததாகவும் புகார் எழுந்து ரகசிய விசாரணை முடிவடைந்துள்ளது, இந்நிலையில் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் இதுகுறித்து கூறுகையில் தான் காங்கிரசுக்கு எதிராக தேர்தலி போட்டியிடுவேன் என்று செய்தி வெளியானதால் காங்கிரசின் பழி வாங்கும் நடவடிக்கை என்றும் மோடியுடன் கூட்டத்தில் கலந்து கொண்டதால் முன்னாள் ராணுவதளபதியை பழிவாங்குகிறார்கள் என பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன‌

முலாயம் மீதான சொத்துகுவிப்பு வழக்கை நேற்று சிபிஐ கைவிடுவதாக அறிவித்தது, விகே சிங் மீது சிபிஐ பாயப்போகிறது, சிபிஐ என்ன மத்திய அரசின் வாலாட்டும் பிரிவா?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media